இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓயாத நடை - சிபி

படம்
ஒருவருக்குக் கிடைத்த சாதாரண விருதைக் கூட அவர் சட்டகத்திலிட்டு சுவரில் மாட்டுவதும், ஷோகேஸ்களில் அலங்கரிப்பதும், வீட்டிற்கு வருவோர்களுக்கு காட்டி மகிழ்வதும் இன்றைய சாதாரண நடைமுறைகளில் ஒன்று. அதிலிருந்து அசாதாரணமான ஆளுமைகள் எவ்வாறு மாறுபடுகிறார்கள் என்று சிவராஜ் அண்ணா ஒருமுறை எங்களிடம் சொல்லியிருந்தார். அவர் ஒருமுறை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களைப் பார்த்துவிட்டு கிளம்பும் பொழுது அம்மா அவரை ஒரு நிமிடம் இருக்கச் சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே சென்று ஒரு நீளமான ஏட்டை எடுத்து வந்தாராம். அதற்குள் வைத்திருந்த அவர் பெற்ற விருதினை எடுத்து "சிவராஜூ நீ ஏதேதோ ஊருக்கெல்லாம் போரியே. இத காட்டுனா டோல் கேட்ல எல்லாம் காசில்லாம போலம்னு சொல்றாங்க. இந்தா இத நீ வெச்சுக்கோ" என்று சொல்லி சிவராஜ் அண்ணாவிடம் நீட்டியுள்ளார். அதை கேட்டு சிவராஜ் அண்ணா அதிர்ந்த அதே அளவு அவர் எங்களிடம் சொல்லும் போது நாங்களும் அதிர்ந்தோம்.  அவர் அன்று கிருஷ்ணம்மாள் பாட்டியை பற்றி எங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கூடிய விரைவில் பாட்டியை பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். சக மாணவர்களிடம் கேட்ட போது இறுதியா...

பறவைகளைப் பார்த்தல் - சிபி

படம்
         நாங்கள் ஒருமுறை ஆலயக் கலை முகாமிற்கு கிருஷ்ணன் அவர்களுடன் வெள்ளிமலை செல்லும் பொழுது நித்தியவனத்திற்கு சற்று முன்பு உள்ள ஒரு சிறிய டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்தோம். லேசான மழை பெய்து கொண்டு இருந்தது. நனையலாம் போல் இருந்தது. அப்போது கிருஷ்ணன் அவர்கள் திடீரென்று அந்த ஓலைச் சாலையின் ஒரு பக்க திறப்பிற்கு பூரிப்புடன் விரைந்தார். நான் என்னவாக இருக்கும் என்று எழுந்தேன். அவர் திரும்பி "ஒரு இருவாச்சி பறந்து போச்சு" என்றவாறு வெளியே மழையில் நனைந்தவாறே காரின் அருகில் வேகமாக நடந்தார். நானும் அவர் பின்னேயே நடந்து சென்றேன். அங்கு போய் நின்றதும் "பறந்து போய்ருச்சு புதுசா நீங்க பாத்த ஆச்சரியமா இருக்கும் ஆனா இங்க அடிக்கடி பாக்கலாம்" என்றார். எனக்கு பார்க்க இயலவில்லை என்கிற சிறு ஏமாற்றம்.  இருவாச்சி        அதன் பின் நித்தியவனத்திலும், அதிகாலை நடையிலும் எண்ணற்ற பறவைகளைக் கண்டேன். ஆனால் பறவைகளைப் பார்ப்பதில் எனக்கு இருக்கும் சிக்கல் அது என்ன பறவை என்றே தெரியாது. என்ன பறவை, அதன் ஓசை, மற்ற பறவைகளுடன் அதன் வித்தியாசம் என எதுவும் எனக்கு தெரியாமல...