இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தாளரை துரத்துதல் - சிபி

படம்
இன்று மாலை ஆறு மணியில் இருந்து ஒருவரை துரத்திக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் அவரை சென்றடையும் சில கணங்கள் முன் கிளம்பி வேறு இடத்திற்கு சென்று விடுகிறார். ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டே இருக்கிறார். நாங்களும் அவர் செல்லும் இடங்களை எல்லாம் பின்தொடர்ந்து கொண்டே செல்கிறோம். இவ்வளவு தூரம் ஒருவரை துரத்துவதற்குக் காரணம் அவருக்கு ஒரு வாழ்த்து சொல்வதே. மாலை நாலரை மணிக்கு நான் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு  வந்து திறன் பேசியை எடுத்துப் பார்த்தால் கிருஷ்ணன் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்." 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. ஆறு மணிக்கு கிளம்பி அவரை பார்க்கச் செல்கிறோம் நீங்கள் விரும்பினால் இணைந்து கொள்ளலாம்." என்பதே அந்த செய்தி. இனி எனக்கு சிறுவலூரில் இருந்து பெருந்துறைக்கு 5 மணிக்கு மேல் தான் பேருந்து. நிச்சயமாக ஆறு மணிக்கு ஈரோடு செல்ல இயலாது. ஆகையால் நான் வரத் தாமதமாகிவிடும் நீங்கள் சென்று வாருங்கள் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். நிழலின் தனிமை வாசித்து முடித்த போதே தேவிபாரதி அவர்களைப் பார்க்கச் செல்லலாம் என்று திட்டமிட்டிர...

நாளும் சிறந்த நாள்- சிபி

படம்
இன்று நாங்கள் ஒரு மலையாளிகளின் கிராமத்திற்கு சென்று ஏராளமான மலையாளிகளைக் கண்டோம். ஆனால் அந்த கிராமம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அவர்கள் யாருக்கும் மலையாளம் தெரியாது. அவர்கள் அனைவரும் தமிழர்கள் தான். ஆனால் நான் எந்தப்பொய்யும் சொல்லவில்லை அவர்கள் மலையாளிகள் தான். குருவரெட்டியூர் அருகே கண்ணாம்மூச்சி என்ற ஊரில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் பாலமலை என்ற மலையில் ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு அடிப்படை மருந்துகளை உள்ளடக்கிய முதலுதவிப் பெட்டிகள் வழங்குவதற்காகத்தான் நாங்கள் இன்று சென்றோம். ஆனால் அந்தப் பயணமே மனதில் என்றும் மறையப்போகாத இடத்தை பிடித்துவிட்டது. கண்ணாம்மூச்சியில் சாப்பிட்டுவிட்டு க்ரூஷர் ஜீப்பில் நாங்கள் மொத்தம் 12 பேர் பயணத்தை தொடங்கினோம். அந்த வண்டி தான் அந்த ஊருக்கு ஒரே போக்குவரத்து. பொதுமக்களுக்கு 60 ரூபாய் பயணத்தொகை. நாங்கள் அந்த வண்டியை மொத்தமாக வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றோம். ஒரு பெரியவர் வழியை மறித்து வண்டியின் மேலே ஏறிக்கொண்டார். வண்டி குண்டும் குழியுமான மண்பாதையில் செல்லத் தொடங்கியது. அனு "ரோடு எப்ப சார் வரும்" என்று கேட்டாள். "ரோட்ல தா மா...