இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜோதியின் வடிவம் - தமிழ்ச்செல்வி

படம்
"கிருஷ்ணம்மாள்  ஜெகந்நாதன்" என்ற ஆளுமையின் பெயரை நான் அறக் கல்வி வகுப்பில் " சிவராஜ்" அண்ணா வகுப்பெடுக்கும் போது அறிந்து கொண்டேன். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் என்பவர் சிறுவயதிலிருந்தே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பின்னர் வினோபா  பாவேவுடன் இணைந்து பூமிதான இயக்கத்தில் தலித் மக்களுக்கு நிலங்களை பெற்றுத் தந்துள்ளார்.  மார்ட்டின் லூதர் கிங், காமராஜர் போன்றோரின் நட்பு இவருக்கு உண்டு.சிவராஜ் அண்ணா கட்டாயம் ஒரு நாள் நாம் அனைவரும் பாட்டியை பார்க்கச் செல்லலாம் என்று கூறினார்.அவ்வாறாக நாங்கள் 13 பேர் கொண்ட குழுவாக கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களை பார்க்கச் சென்றோம். நாங்கள் அனைவரும் காந்திகிராமத்தை அடைந்தோம். பின்னர் சிவராஜ் அண்ணாவும், மஞ்சரி அக்காவும் எங்களுடன் இணைந்து கொண்டனர். சிறிது தொலைவை கடந்த பின்னர் ஊழியர் அகத்தை அடைய முடியும் என்று ஸ்டாலின் அண்ணாவும் முத்து அண்ணாவும் கூறினார்கள். நாங்கள்  நடக்கத் துவங்கினோம்.  திடீரென இரயில் ஒன்று வேகமாக அந்த பாதையின் வழிச் சென்றது. அந்த இடத்தில் தான் காந்தியின் நினைவாக ஓர் நினைவிடம் கட்டப்பட்டிருந்தது. அண்ணல் காந்தியடிகள்...

மூன்றாவது மாடி - சிபி

படம்
முதல் மாடிக்கும் மூன்றாவது மாடிக்கும் இந்த உலகின் புறச்சூழலில் எத்தனை வித்தியாசங்கள். நான் தேர்வெழுதும் சமயங்களில் பதில் தெரியாமல் கொட்டை முழி முழிக்கும் போதும், நேரத்தைப் போக்க நாதியற்று இருக்கும் போதும் கை கொடுப்பது ஜன்னல் வழிக் கொஞ்சம் தெரியும் இந்த பரந்த பரப்பே. அனைத்துத் தளங்களிலும் பரிட்சை எழுத வேண்டியிருக்கும். ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு அறையில். தெரியாத கேள்விக்கு தெரியாத பதிலை பக்கம் பக்கமாக எழுதுவதைத் தவிர சலிப்பான வேலை வேறொன்றுமில்லை. சில சமயங்களில் தேர்வே எழுத வேண்டாம் சும்மாவே இருந்துவிடுவோம், இல்லை தூங்கி விடுவோம் என்னும் அளவிற்கு சலிப்பு நம்மை போட்டு அழுத்தும். அப்போதெல்லாம் விரிந்த தோள் கொண்ட இந்த இயற்கையின் மீது கொஞ்ச நேரம் சாய்ந்திருந்துவிட்டு தான் எழுதத் தொடங்குவேன். தரை தளத்தில் இருந்தோ முதல் மாடியில் இருந்தோ பார்க்கும் இந்த உலகிற்கும் மூன்றாவது மாடியில் இருந்து பார்க்கும் இந்த உலகிற்கும் உள்ள வித்தியாசங்கள் வியப்பில் ஆழ்த்தியன.  மிக உயர்ந்த மரத்தின் தண்டில் மெல்ல நகரும் கம்பிளிப்பூச்சிகளின் தொகை எத்தனை அழகு. வெல்வெட் துணி ஒன்று மிகப்பெரிய மரத்தை முழுவதும் மூடி வி...

வரலாற்றை சந்தித்தல் - மு.சௌமியா ஸ்ரீ

படம்
நான் சிறுவயதிலிருந்து என்னை சுற்றி இருக்கும்  பெண்களின் வாழ்க்கையைப் பார்த்து ஒரு பெண், வாழ்வில் தான் நினைத்ததை செய்யவும் விரும்பியதைப் போல் வாழவும் திருமணமும் குடும்பமும் ஒரு தடையாக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் புத்தகத்தில் மேரி கோம் அவர்களின் சுயசரிதத்தைப் படித்தேன். அப்போது "மேரி கோம்" அவர்கள் உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் 5 முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்று தெரிந்துக் கொண்டேன். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு திருமணம் ஆகிய பிறகும் குத்துச்சண்டையில் பங்கேற்றார் எனவும் குழந்தை பெற்ற பிறகும் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கியுள்ளார் என்பது என் எண்ணத்தையே மாற்ற ஆரம்பித்தது.  பிறகு, ஒருநாள் சிவராஜ் அண்ணா வகுப்பில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் என்ற பாட்டியைப் பற்றிக் கூறினார். அப்போது, பாட்டி பத்மபூஷன் விருது பெற்றவர் என்றும் கூறினார். சிவராஜ் அண்ணா ஒருநாள் பாட்டியைப்  பார்த்துவிட்டு திரும்பும் போது பாட்டி அந்த பத்மபூஷன் விருதை நோட்டின் அட்டையின் நடுவே இருந்து எடுத்து சிவராஜ் அண்ணாவிடம் "இதை நீ டோல்கேட்டில் காண்ப...