மும்மாநிலப் பயணம் - 1
நாங்கள் ஒருமுறை பிள்ளை திண்ணிக்கரடு சென்றிருந்த போது பாரத் தர்ஷன் குறித்து கிருஷ்ணன் அவர்கள் எங்களிடம் கூறினார். அப்போது அங்கு இருந்த இருபது பேருக்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது. பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் கொண்ட இந்தியப் பயணம் அது. நாங்கள் அது குறித்து தேடிப் பார்த்த போது அது நாங்கள் எதிர்பார்த்த இடங்களையும் எதிர்பார்த்த தொகையையும் உள்ளடக்கியதாக இல்லை. அப்போது தான் கிருஷ்ணன் அவர்கள் மீண்டும் ஒரு யோசனை வழங்கினார். நீங்கள் செல்ல விரும்பும் இடங்கள், செல்லும் தேதி, அதற்கான தொகை என எல்லாவற்றையும் நீங்களே திட்டமிட்டு ஒருங்கிணைத்து சென்று வாருங்கள் என்றார். அந்த பயணத்திற்கு அடிப்படையான ஒரு வரைபடத்தையும் அவரே வழங்கினார். நாங்கள் செயல்படத் தொடங்கினோம். ஜனவரியில் செல்ல வேண்டும் என்று அக்டோபரில் இருந்து திட்டமிடத் தொடங்கினோம். பதினெட்டு பேராக தொடங்கிய எங்கள் குழு சுருங்கி நான்கு நபர்களாக இப்போது இந்தப் பயணத்தை தொடங்கி உள்ளோம். ஈரோட்டில் தொடங்கும் எங்கள் பயணம் சென்னை வழியாக ஜம்மளமடுகுவிற்கு சென்று அங்கிருந்து கந்திக்கொட்டா, பிளம் குகைகளைப் பார்த்து விட்டு பின் யாகண்டி கோவில் மற்றும் ...